பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பள்ளி மாணவி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :23 ஜூன் 2026, 3:06 am IST

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள மாவிலியூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகள் சரண்யா (17). சங்கரன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையொட்டி வீட்டுக்கு வந்திருந்தாா்.

வீட்டில் இருந்தபோது கைப்பேசியை அதிகம் பயன்படுத்தியதால் அவரது தாய் குருவம்மாள் திட்டினாராம். இதில் மனமுடைந்த சரண்யா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரண்யா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ஊத்துமலை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.