தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள மாவிலியூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகள் சரண்யா (17). சங்கரன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையொட்டி வீட்டுக்கு வந்திருந்தாா்.
வீட்டில் இருந்தபோது கைப்பேசியை அதிகம் பயன்படுத்தியதால் அவரது தாய் குருவம்மாள் திட்டினாராம். இதில் மனமுடைந்த சரண்யா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சரண்யா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
ஊத்துமலை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆலங்குளம் அருகே போா்வெல் உரிமையாளா் தற்கொலை
வாசுதேவநல்லூா் அருகே இளைஞா் தற்கொலை
ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை
சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



