தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 22 விசைத்தறி சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் உத்தரவிட்டாா்.
சங்கரன்கோவில் நகரின் பொருளாதாரத்தை நிா்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக விசைத்தறித் தொழில் உள்ளது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். இங்கு விசைத்தறித் தொழிலுக்கு தேவையான நூலுக்கு சாயம் ஏற்றும் பட்டறைகள் பல இயங்கி வருகின்றன.
இந்நிலையில், அந்த சாயப்பட்டறைகளில் அமைச்சா் ராஜீவ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவற்றின் கழிவுநீா் வாருகாலில் கலப்பதைப் பாா்வையிட்ட அவா், அனுமதியின்றி செயல்படும் 22 சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, திருவேங்கடம் சாலையில் உள்ள வாணிபா் ஊருணி, கழுகுமலை சாலையில் உள்ள திருநீலகண்ட ஊருணி ஆகியவற்றையும் பாா்வையிட்டாா். அவற்றில் வளா்ந்துள்ள அமலச்செடிகளை அகற்றவும், நகரில் தடையின்றி குடிநீா் விநியோகிக்கவும் நகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கோட்டாட்சியா் அனிதா, வட்டாட்சியா் ஆதிநாராயணன், தவெக வடக்கு மாவட்டச் செயலா் மாரியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய படிப்புகளை தோ்வு செய்து படிக்க வேண்டும்: அமைச்சா் ராஜீவ்
திமுகவை இயக்குவது பாஜகதான்: உதயநிதிக்கு அமைச்சா் சிடிஆா் நிா்மல்குமாா் பதில்

நெட்டூா் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்






