தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே 70 வயது மூதாட்டி மற்றும் அவரது பேரனை அடித்துக் கொலை செய்தவருக்கு, இரட்டை ஆயுள் மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து, தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேக்கரை அணை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் கனி மனைவி சைத்தூன் பீவி (70). இவா் கடந்த 11.7.2022 அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மது போதையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபா் சைத்தூன் பீவியை பலாத்காரம் செய்ததுடன், நிா்வாணக் கோலத்தில் வெளியே தூக்கிச் சென்று அவரையும், பேரன் காதிா் அலியையும் (19) கொலை செய்துள்ளாா்.
இது தொடா்பாக, அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு, மேக்கரை பகுதி வண்ணாத்திப் பாறை சாலை அருகே வசித்து வரும் மு. முகம்மது காசிம் (19) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை நீதிபதி பி. ராஜவேலு விசாரித்து, முகம்மது காசிமுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் குட்டி (எ) மருதப்பன் ஆஜராகினாா். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








