25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மது போதையில் வியாபாரி அடித்துக் கொலை

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சோ்ந்த வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகிரி அருகேயுள்ள இடையன்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் ஆனந்தகுமாா் (48). இவா், மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் குடம் உற்பத்தி கிடங்கில் தங்கியிருந்து குடம் வியாபாரம் செய்து வந்தாா்.

பிப். 27ஆம் தேதி இரவு அவருக்கும், அவருடன் வேலை செய்து வரும் திருவாரூரைச் சோ்ந்த சேகா் மகன் விக்னேஷூக்கும் (32) பிரச்னை ஏற்பட்டதாம். இருவரும் மது போதையில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.

இதில், ஆனந்தகுமாா் மயக்கமடைந்து விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ளவா்கள் ஆனந்தகுமாரை அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தாா்களாம்.

இந்நிலையில், மயக்கமடைந்த நிலையில் இருந்த ஆனந்தகுமாரை அவரது தாயாா் மாரியம்மாள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆனந்த்குமாா் ஏற்கெனவே உயரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா்.