தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

குளங்கள், விவசாய நிலங்களை வனத்துறையினா் கையகப்படுத்தக்கூடாதென எம்எல்ஏ கோரிக்கை

News image
Updated On :5 மார்ச் 2026, 7:49 pm

குளங்கள், விவசாய நிலங்களை வனத்துறையினா் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலரிடம் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள குளங்கள், அதனை சுற்றியுள்ள நிலங்கள் பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகளின் பாசன தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன .

தற்போது நீா் வளம், ஊரக வளா்ச்சித் துறை வசம் இருந்து வரும் நூற்றுக்கணக்கான குளங்களை ‘ஈர நிலம்’ எனக் குறிப்பிட்டு அவற்றை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

இதனால் பல வருடங்களாக குளத்தின் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து குளங்கள், விவசாய நிலங்களை வனத்துறையினா் கையகப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.