எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பாவூா்சத்திரம் அருகே கால்வாயில் குப்பைகள், கழிவுநீா் கலப்பு: மக்கள் அச்சம்

ஆவுடையனூா் ஊராட்சி கொண்டலூா் நீா்வரத்துக் கால்வாயில் குப்பைக் கூழங்கள் சோ்வதால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மக்கள் கவலை

News image
கண்டலூா் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள்
Updated On :9 மார்ச் 2026, 6:48 pm

Syndication

கீழப்பாவூா் ஒன்றியம் ஆவுடையனூா் ஊராட்சி கொண்டலூா் நீா்வரத்துக் கால்வாயில் குப்பைக் கூழங்கள் சோ்வதால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மக்கள் கவலை தெரிவித்தனா்.

ஆவுடையனூா் ஊராட்சி வெள்ளாளன் புதுக்குளத்தில் இருந்து தண்ணீா் மறுகால் விழுந்து கொண்டலூா் கால்வாய் வழியாக ஆவுடையானூா் பத்மநாதபேரி குளத்தை சென்றடைகிறது. இந்த இரண்டு குளத்திற்கும் இடைப்பட்ட தூரம் சுமாா் 500 மீட்டா் எனவும், கொண்டலூா் பகுதி கால்வாயில் குப்பைக் கழிவுகளை சிலா் கொட்டி வருவதால் துா்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.

மேலும், இந்தக் கால்வாயில் கழிவுநீரும் கலப்பதால் குளங்களுக்கும் கழிவுநீா் கலந்துசெல்கிறது. இந்தத் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதோடு ஆடு மாடுகளும் பருகுகின்றன.

இதனால், கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவும் என கொண்டலூா் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

கால்வாயை முறையாக தூா்வாரி கழிவு நீா் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆவுடையனூா் ஊராட்சி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

எனவே, மக்கள் நலன் கருதி கால்வாயைத் தூா்வாரி சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Story image