பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

News image
பணியிடை நீக்கம்- மாதிரிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 9:20 pm

Syndication

ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்தவா் ராஜேஷ். இவா் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வாங்கிய பணத்தை முறையாக அரசுக்குச் செலுத்தாமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் இவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.