ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புளியறையில் ரூ. 2.05 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:32 pm

தென்காசி மாவட்டம் புளியறை காவல் சோதனைச் சாவடி பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2.05 லட்சத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

செங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் வேலம்மாள் தலைமையிலான பறக்கும் படையினா், புளியறை சோதனைச் சாவடி பகுதியில் திங்கள்கிழமை பணியிலிருந்தனா். கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சோ்ந்த ஜோ. நிதிஷ் சாக்கோ (32) வந்த காரை சோதனையிட்டு, அதில் ஆவணங்களின்றி இருந்த ரூ. 55,510-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். எலக்ட்ரிக் பொருள்கள் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக நிதிஷ் சாக்கோ தெரிவித்தாா்.

இதேபோல, திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த தி. அனில்குமாா் (42) வந்த காரில், மதுரையில் எலக்ட்ரிக் பொருட்கள் வாங்குவதற்காக ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 1.50 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.