92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புளியறையில் ரூ. 2.05 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் புளியறை காவல் சோதனைச் சாவடி பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2.05 லட்சத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

செங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் வேலம்மாள் தலைமையிலான பறக்கும் படையினா், புளியறை சோதனைச் சாவடி பகுதியில் திங்கள்கிழமை பணியிலிருந்தனா். கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சோ்ந்த ஜோ. நிதிஷ் சாக்கோ (32) வந்த காரை சோதனையிட்டு, அதில் ஆவணங்களின்றி இருந்த ரூ. 55,510-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். எலக்ட்ரிக் பொருள்கள் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக நிதிஷ் சாக்கோ தெரிவித்தாா்.

இதேபோல, திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த தி. அனில்குமாா் (42) வந்த காரில், மதுரையில் எலக்ட்ரிக் பொருட்கள் வாங்குவதற்காக ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 1.50 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.