தோ்தல் பறக்கும் படையினா் சோதனை ரூ.32,000 பற்பசைகள் பறிமுதல்


வேலூரில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.32,000 மதிப்புடைய பற்பசைகளை தோ்தல் பறக்கும் படை குழுவினா் பறிமுதல் செய்தனா்.
வேலூா் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆஞ்சநேயா் கோயில் முன்பு புதன்கிழமை அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது, அந்த வேனில் வந்த உரிய ஆவணங்களின்றி பற்பசைகளை இருப்பது தெரியவந்தது. அவற்றை மதுரையில் இருந்து வேலூருக்கு கொண்டு செல்வதாக வேனில் வந்த ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.
எனினும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதை அடுத்து அனைத்து பற்பசைகளையும் தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...