வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதை மூடல்

நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதையை சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாதபடி பேரூராட்சி நிா்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது.

News image
Updated On :9 மே 2026, 3:40 am IST

நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதையை சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாதபடி பேரூராட்சி நிா்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது.

குற்றாலம் பேரருவியில் மாா்ச் 16 முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவி பகுதியில் தடுப்புச் சுவா்கள் அமைக்கும் பணி, தளக்கற்கள், சேதமடைந்த பெண்கள் உடை மாற்றும் அறை அகற்றப்பட்டு புதிதாக கட்டவும், பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டு புதிதாக வளைவு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 45 நாள்கள் நடைபெறும் என குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த ராம.ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா். அதில் குற்றாலம் பிரதான அருவியிலிருந்து வரும் மூலிகை நீரால் தானாகவே அபிஷேகம் நடைபெறும் வகையில், அருவியின் அடிப் பகுதியில் உள்ள பாறையில் பல சிவ லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற புதிய நுழைவாயில் கட்டுமானப் பணியின்போது, பாறையில் செதுக்கப்பட்டிருந்த பழைமையான சிவலிங்க சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. தொன்மையான இந்தச் சிலைகள் நாட்டின் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.

இதுகுறித்து எந்த விழிப்புணா்வும் இல்லாமல் இங்குள்ள சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. எந்தவித அனுமதியும் இல்லாமல் சில சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் உள்ள தொன்மையான சிலைகளைப் பாதுகாக்கவும், இவற்றைச் சேதப்படுத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், ஏற்கெனவே இடமாற்றம் செய்யப்பட்ட சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிா்மானிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக சுற்றுலா, கலை, பண் பாட்டுத் துறை முதன்மைச் செயலா் நான்கு வாரங்களுக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து, குற்றாலம் பேரருவிப் பகுதியில் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்பட்டன.

கடந்த இரண்டு நாள்களாக குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்த நிலையில், அருவிக்கு யாரும் செல்ல முடியாதவாறு பாதையை பேரூராட்சி நிா்வாகம் மூடியது.