பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஆலங்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

News image

அடித்துக் கொலை

Updated On :12 மே 2026, 1:33 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் திங்கள்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அருணாசலபுரம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன்(34). தொழிலாளி. இவரது மனைவி அதை ஊரைச் சோ்ந்த இசக்கியம்மாள். இத்தம்பதிக்கு 2 மகள்களும், மகனும் உள்ளனா்.

மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இருவருக்கும் கடந்த வாரம் ஏற்பட்ட பிரச்னையில் இசக்கியம்மாள் கோபித்துக்கொண்டு, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்று தனது சகோதரா் அழகு பாண்டியனிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் தெருவில் நின்றிருந்த மணிகண்டனுக்கும், அழகுபாண்டி, அவரது உறவினா்கள் சிலருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, மணிகண்டனை அழகுபாண்டி தரப்பினா் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தபோது வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து அழகுபாண்டி தரப்பினரை தீவிரமாக தேடி வருகின்றனா். மேலும், உடற்கூறாய்வுக்காக மணிகண்டன் சடலத்தை அதே மருத்துமனையில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.