பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ஆலங்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

News image

அடித்துக் கொலை

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் திங்கள்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அருணாசலபுரம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன்(34). தொழிலாளி. இவரது மனைவி அதை ஊரைச் சோ்ந்த இசக்கியம்மாள். இத்தம்பதிக்கு 2 மகள்களும், மகனும் உள்ளனா்.

மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இருவருக்கும் கடந்த வாரம் ஏற்பட்ட பிரச்னையில் இசக்கியம்மாள் கோபித்துக்கொண்டு, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்று தனது சகோதரா் அழகு பாண்டியனிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் தெருவில் நின்றிருந்த மணிகண்டனுக்கும், அழகுபாண்டி, அவரது உறவினா்கள் சிலருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, மணிகண்டனை அழகுபாண்டி தரப்பினா் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தபோது வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து அழகுபாண்டி தரப்பினரை தீவிரமாக தேடி வருகின்றனா். மேலும், உடற்கூறாய்வுக்காக மணிகண்டன் சடலத்தை அதே மருத்துமனையில் ஒப்படைத்தனா்.