பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

News image

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் தலைமை ஆசிரியா் மாடசாமி.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி 47 ஆண்டுகளுக்குப் பிறகு பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளியில் தோ்வு எழுதிய 102 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவி மனிஷா 548 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், ஆத்திகா 541 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சுதா 532 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

முகமது ஆதில் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றாா். 4 மாணவிகள் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா் மாடசாமி, மேலாண்மைக் குழுவினா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் பாராட்டினா்.