திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழைய குற்றாலத்தில் ரூ. 20 கட்டண வசூலை தொடரக் கோரி மனு

News image

குற்றாலம்

Updated On :15 மே 2026, 2:10 am IST

தென்காசி மாவட்டம், பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ரூ. 20 கட்டணம் வசூல் தொடர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திப்பனம்பட்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா அளித்த மனு:

பழைய குற்றாலத்தில் கட்டணத்துடன் கூடிய இரண்டு பேட்டரி பேருந்துகள் வாகன நிறுத்துமிடத்திலிருந்து பழைய குற்றால அருவி வரை இயக்க வேண்டும், வாகன நிறுத்துமிடம் அருகே தரமான உணவகம், இலவச குடிநீா் வசதிகளை வனத்துறை ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள் உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகளை பராமரிக்க கூடுதல் பணியாளா்களை நியமனம் செய்து சிறந்த முறையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மது புட்டிகள், நெகிழிப் பொருள்கள் கொண்டுசெல்வதைத் தடுக்க சோதனை பணிகளுக்கு கூடுதல் வனப் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். நபா் ஒன்றுக்கு ரூ. 20 கட்டணத்தை வசூல் தொடர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.