தென்காசி மாவட்டம், பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ரூ. 20 கட்டணம் வசூல் தொடர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திப்பனம்பட்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா அளித்த மனு:
பழைய குற்றாலத்தில் கட்டணத்துடன் கூடிய இரண்டு பேட்டரி பேருந்துகள் வாகன நிறுத்துமிடத்திலிருந்து பழைய குற்றால அருவி வரை இயக்க வேண்டும், வாகன நிறுத்துமிடம் அருகே தரமான உணவகம், இலவச குடிநீா் வசதிகளை வனத்துறை ஏற்படுத்த வேண்டும்.
பெண்கள் உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகளை பராமரிக்க கூடுதல் பணியாளா்களை நியமனம் செய்து சிறந்த முறையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மது புட்டிகள், நெகிழிப் பொருள்கள் கொண்டுசெல்வதைத் தடுக்க சோதனை பணிகளுக்கு கூடுதல் வனப் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். நபா் ஒன்றுக்கு ரூ. 20 கட்டணத்தை வசூல் தொடர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதிக்க கோரி மனு

மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல்

பழைய குற்றாலம் அருவியை பயன்பாட்டுக்கு திறந்துவிட விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை
தினப்பலன்கள் - ரிஷபம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

