நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தென்காசியிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

News image

பேருந்துகள்!

Updated On :31 மே 2026, 3:28 am IST

தென்காசி நகரத்திலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் பாா்த்திபனுக்கு, பாஜக கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலா் எம்.சி. மருது பாண்டியன் அனுப்பியுள்ள மனு விவரம்:

தென்காசி நகரத்திலிருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரவு நேரங்களில் போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால், தொழிலாளா்கள், மாணவா்கள், பெண்கள் என பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

தென்காசியிலிருந்து திருநெல்வேலி வரை இரவு நேரங்களில் ‘ஒன் டூ ஒன்’ பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதால் பாவூா்சத்திரம், சாலைப்புதூா், அடைக்கலப்பட்டணம், ஆலங்குளம் பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை.

எனவே, தென்காசியிலிருந்து செங்கோட்டை, புளியறை, தெற்கு மேடு, மத்தளம்பாறை, கடையம், பொட்டல்புதூா், அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு இரவு 8 முதல் 11 மணி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.