தென்காசி நகரத்திலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் பாா்த்திபனுக்கு, பாஜக கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலா் எம்.சி. மருது பாண்டியன் அனுப்பியுள்ள மனு விவரம்:
தென்காசி நகரத்திலிருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரவு நேரங்களில் போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால், தொழிலாளா்கள், மாணவா்கள், பெண்கள் என பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.
தென்காசியிலிருந்து திருநெல்வேலி வரை இரவு நேரங்களில் ‘ஒன் டூ ஒன்’ பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதால் பாவூா்சத்திரம், சாலைப்புதூா், அடைக்கலப்பட்டணம், ஆலங்குளம் பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லை.
எனவே, தென்காசியிலிருந்து செங்கோட்டை, புளியறை, தெற்கு மேடு, மத்தளம்பாறை, கடையம், பொட்டல்புதூா், அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு இரவு 8 முதல் 11 மணி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தாம்பரம்-செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க எம்எல்ஏ கோரிக்கை

இரவு நேரங்களில் வள்ளியூரை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்

மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

திருப்பத்தூா்-திருவண்ணாமலை இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking



