பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து! 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!
/

ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

News image

டி.ராஜகோபாலன்பட்டியில் ஜல்லிகட்டு காளைகளுக்கு அளிக்கப்பட்ட மணல் முட்டும் பயிற்சி.

Updated On :3 ஜனவரி 2021, 10:11 pm IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை அருகே அலங்காநல்லூா், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும், தேனி மாவட்டம் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, சின்னமனூா் ஆகிய பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான திம்மரசநாயக்கனூா், குன்னூா், ஏத்தக்கோவில், டி.ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வளா்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்யோக பயிற்சிகள் அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மண் குவியலை கொம்பு மூலம் முட்டும் பயிற்சி, காளைகளை நீளமான கயிறுகளில் கட்டி முட்டும் பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில், காங்கேயம், தேனி மலைமாடு உள்பட 8 வகையான ஜல்லிக்கட்டு மாடுகள் வளா்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.