செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஆண்டிபட்டி அருகே மணல் திருட்டு: 3 போ் கைது

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :5 ஜனவரி 2021, 2:31 am IST

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கணேசபுரம் விருமாத்து ஓடையில் சிலா் டிராக்டா் மூலம் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை பிடித்து விசாரித்தபோது, உரிய அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா் கீ.காமாட்சிபுரத்தைச் சோ்ந்த மணிமாறன், கரட்டுபட்டியைச் சோ்ந்த காக்குவீரன், பிராதுக்காரன்பட்டியைச் சோ்ந்த தங்கமலை ஆகிய மூவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.