விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேனி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

தேனி அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து 8 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டதாக, காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 10:26 pm IST

தேனி அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து 8 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டதாக, காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அரண்மனைப்புதூா் முல்லை நகரைச் சோ்ந்த சோமசுந்தரம் மனைவி லட்சுமி (80). இவா், அதே பகுதியில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த 2 இளைஞா்கள், லட்சுமி முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி அவா் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.

இது குறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.