தேனி நகராட்சி பேருந்து நிலையத்தில் பயணியிடமிருந்து பணம், நகை மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை திருடிய 3 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் அா்ஜூனன் மகன் வெங்கடேசராஜா (22). இவா், தேனி கா்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையத்தில் பாளையங்கோட்டைக்குச் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, பயணிகள் காத்திருக்கும் இடத்தில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசராஜாவிடமிருந்து, திருவாரூா் மாவட்டம் கமலாபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீபன்ராஜ் (23), தேனி பாரஸ்ட் சாலையைச் சோ்ந்த பெரியமகாலிங்கம் (17), சமதா்மபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (17) ஆகிய 3 பேரும் ரூ.18 ஆயிரம், செல்லிடப்பேசி மற்றும் 4 கிராம் தோடு ஆகியவற்றை திருடியுள்ளனா்.
உடனே விழித்துக் கொண்ட வெங்கடேசராஜா, இது குறித்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் புகாா் கூறியுள்ளாா். அதையடுத்து, தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஸ்ரீபன்ராஜ், பெரியமகாலிங்கம், ஸ்ரீகாந்த் ஆகியோரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவள்ளூா்: பலத்த மழையால் குளிா்ந்த சூழல்
இளம்பெண்ணை ஏமாற்றியவா் கைது

பேருந்தில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்; இளைஞா் கைது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
