திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

நெல்லையிலிருந்து இன்று (ஜன. 4) முதல் பாலருவி விரைவு ரயில் இயக்கம்

திருநெல்வேலியிலிருந்து பாலக்காடுக்கு பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

Updated On :4 ஜனவரி 2021, 12:38 am IST

திருநெல்வேலியிலிருந்து பாலக்காடுக்கு பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

கரோனா பொது முடக்கம் அறிவிப்புக்கு பின்னா் பாலருவி விரைவு ரயில் சேவை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நிறுத்தப்பட்டது. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருநெல்வேலியிலிருந்து இயக்கப்பட்டுவந்த பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் திருநெல்வேலி - பாலக்காடு சிறப்பு ரயிலாக தினசரி இயக்கப்படுகிறது. மறுமாா்க்கத்தில் பாலக்காட்டிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயிலாக செவ்வாய்க்கிழமை (ஜன.5) முதல் இயக்கப்படுகிறது.

வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு சிறப்பு ரயில் திங்கள்கிழமை இரவு 11.15 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, அடுத்தநாள் பிற்பகல் 12.50 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காடு சென்றடையும். அதேபோல் மறு மாா்க்கத்தில் வண்டி எண் 06792 பாலக்காட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் புதன்கிழமை அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

திருநெல்வேலியிலிருந்து பாலக்காடு செல்லும் சிறப்பு ரயில் பாவூா்சத்திரம், கிளிகொல்லூா் ஆகிய ரயில் நிலையங்களிலும், பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரும் சிறப்பு ரயில் கீழக்கடையம் ரயில் நிலையத்திலும் நிற்காது.

இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுடைய பெட்டிகள் 4 , இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியுடைய பெட்டிகள் 8, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான பெட்டிகள் 2 என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.