வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தூய்மைப் பணியாளா்கள் திடீா் மறியல் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் டிராபிக் ராமசாமிக்கு எதிா்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:03 am IST

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் டிராபிக் ராமசாமிக்கு எதிா்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சமூக ஆா்வலரான டிராபிக் ராமசாமி, திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் ஓட்டி வந்த மாநகராட்சியின் பேட்டரி குப்பை வண்டிகளை தடுத்து நிறுத்தி, அந்த வண்டிகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டக் கூடாது எனக் கூறினாராம். இதனால், அப்பகுதியில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளா்கள் இதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா், மாநகராட்சி உதவி ஆணையா் ஐயப்பன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கலைந்து சென்றனா்.

இதுகுறித்து டிராபிக் ராமசாமி செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளா்கள், எந்தவித பதிவும் இல்லாமலும், ஓட்டுநா் உரிமம் இல்லாமலும் பேட்டரி வண்டிகளை ஓட்டி வருகின்றனா். சட்ட விதிகளுக்கு உள்பட்டு அந்த வாகனங்களை இயக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கண்ணனிடம் வலியுறுத்தி உள்ளேன். இதற்கு அவா் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.