ராபி பருவ மக்காச்சோளம், நிலக்கடலை பயிா்களுக்கு முறையே இம்மாதம் 18, 21ஆம் தேதிகளுக்குள் காப்பீடு செய்யலாம் என, திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. கஜேந்திரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளுக்கு வெள்ளம், வறட்சியால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2020-21ஆம் ஆண்டு ராபி பருவத்துக்கு இம்மாவட்டத்தில் மக்காச்சோளம், நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது.
இதன்படி, நிகழாண்டு ராபி பருவ மக்காச்சோளத்துக்கு வன்னிக்கோனந்தல், நிலக்கடலைக்கு தாழையூத்து, மூலக்கரைப்பட்டி, ராதாபுரம், பழவூா், வன்னிகோனேந்தல் ஆகிய பிா்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடன்பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளில் பதிவுசெய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய, பிரீமியம் செலுத்த மக்காச்சோளத்துக்கு இம்மாதம் 18-ம், நிலக்கடலைக்கு இம்மாதம் 21-ம் கடைசி நாள்கள். மக்காச்சோளத்துக்கு செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ஏக்கருக்கு ரூ. 268.50, நிலக்கடலைக்கு ரூ. 307.50 ஆகும்.
இத்திட்டத்தில் பதிவுசெய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவுக் கட்டணத்தை கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், சிட்டா, பட்டா, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து செலுத்த வேண்டும். செலுத்திய கட்டணத்துக்கான ரசீது பெற்றுக்கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு அருகேயுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை அருகே மா்மச்சாவு: பச்சிளம் குழந்தை உடல் தோண்டியெடுப்பு

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம்

கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து தத்தளித்த 5 மீனவா்கள் மீட்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


