பொங்கல் திருநாளையொட்டி திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பனையோலைகள் குவிக்கப்பட்டுள்ளன.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள்தோறும் பொங்கலிட்டு சூரியபகவானை வழிபடுவது வழக்கம். பொங்கலிடுவதற்கு பனையோலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பனையோலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சீவலப்பேரி, களக்காடு, மானூா், கங்கனான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக பனையோலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு ஓலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. பனையேறுவதற்கான ஆள்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதுதவிர பனைமரங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விலையேறியுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

சபலென்கா, ஸ்வியாடெக், எலா வெற்றி

வி.சி.க.வின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
