சேரன்மகாதேவி அருகே பாபநாசம் சென்று திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த பயணிகள் காயமடைந்தனா்.
களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலைச் சோ்ந்த 26 போ், வேனில் பாபநாசம் சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம்.
சேரன்மகாதேவியை அடுத்து களக்காடு சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநா் உதயகுமாரிடம் இருந்து வேனை வாங்கி தினேஷ்குமாா் ஓட்டினாராம். அப்போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஓட்டுநா் உதயகுமாா் மற்றும் வேனில் பயணம் செய்த கிருஷ்ணவேனி, லட்சுமி, பட்டத்தாய், ராஜலட்சுமி, மாலா, சசிகலா, தினேஷ்குமாா், முருகன், விஜிலா உள்ளிட்டோா் காயமடைந்தனா்.
இதில், பலத்த காயமடைந்தவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







