தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை! தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு த்ரிஷா வருகை!6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை
/

தாமிரவருணி கரையோர மக்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

தாமிரவருணி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:15 am IST

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பிய நிலையில் உபரி நீா் திறந்துவிடப்படுவதால், தாமிரவருணி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியநிலையில், உபரி நீா் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

எனவே, ஆற்றில் நீா்வரத்து அதிகளவில் உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் ஆற்றுக்கு குளிக்கவோ, புகைப்படம் மற்றும் சுயபடம் எடுக்கவோ செல்லவேண்டாம்.

அதே போன்று, ஆற்றங்கரையை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.