சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

நெல்லையில் இரவில் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி கோரி மனு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் வணிக நிறுவனங்கள் இரவு இயங்க அனுமதி கோரி மாநகர காவல் துணை ஆணையா் சரவணனிடம் மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 8:17 pm

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் வணிக நிறுவனங்கள் இரவு இயங்க அனுமதி கோரி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணனிடம் மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து சங்கத் தலைவா் என்.முருகன், செயலா் க.ராமகிருஷ்ணன் ஆகியோா் சோ்ந்து அளித்த மனு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொருள்கள் வாங்க வருவா் என்பதால், பொதுநலன் கருதி, ஜன. 12ஆம் தேதி இரவு 2 மணி வரையும், ஜன.13ஆம் தேதி இரவு முழுவதும் வணிக நிறுவனங்கள் இயங்கிட அனுமதியும், பாதுகாப்பும் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.