/

பாளை.யில் செவிலியா்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா் மேம்பாட்டு சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 2:02 am IST

தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா் மேம்பாட்டு சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் 6 ஆண்டுகள் பணி நிறைவு செய்த எம்.ஆா்.பி. செவிலியா்களில் 2000 போ் மட்டுமே காலமுறை ஊதியத்துக்கு ஈா்க்கப்பட்டுள்ளனா். மேலும், 11 ஆயிரத்துக்கு மேலானோா் ஒப்பந்த முறையில் தொடா்ந்து வருகிறாா்கள். அவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். எம்.ஆா்.பி. செவிலியா்களுக்கு அரசு ஊழியா்கள்போல சம்பளத்துடன் விடுமுறைகள் அளிக்க வேண்டும். நிரந்தர செவிலியா்களுக்கு இணையான ஊதியம், பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா்கள் ஆஷா அலிஸ் மாதரசி (திருநெல்வேலி), கலையரசி (தூத்துக்குடி), ஜான் பிரிட்டோ (கன்னியாகுமரி) உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். மாநில துணைத் தலைவா் வெங்கடேசன் தொடக்கவுரையாற்றினாா். நிா்வாகிகள் சரஸ்வதி, அனிதா ஐசக், கிரிஸ்டல் ஹேப்சி, காா்த்திக், அமுதலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில செயலா் ராஜ்குமாா் நிறைவுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.