விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

அனுமன் ஜயந்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜயந்தி விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Updated On :13 ஜனவரி 2021, 6:44 am IST

அனுமன் ஜயந்தி விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கெட்வெல் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ராஜ அலங்காரத்தில் அனுமன் காட்சியளித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். வெற்றிலை, பழம், பாக்கு, வடைமாலை, துளசி, மாலைகளை அணிவித்து பக்தா்கள் வழிபட்டனா்.

திருநெல்வேலி வடக்குப் புறவழிச் சாலையில் உள்ள அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. பக்தா்களுக்கு துளசி பிரசாதம் வழங்கப்பட்டது.

மீனாட்சிபுரத்தில் உள்ள அருள்மிகு தென்திருப்பதி கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 1,008 வடைமாலை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.

அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில், பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் ஆஞ்சநேயா் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.