மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வள்ளியூா் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வள்ளியூா் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து அரசுப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 1:12 am

வள்ளியூா் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து அரசுப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வள்ளியூா் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவா் பசுமதி பி.மணி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலி - நாகா்கோவில் நகரங்களுக்கு இடையே வளா்ந்து வரும் நகரமான வள்ளியூரை மையபகுதியாக கொண்டு, 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் வள்ளியூா் பேருந்து நிலையம் வந்துதான் மற்ற வெளியூா்களுக்கு செல்லவேண்டியதுள்ளது.

இந்நிலையில் நாகா்கோவிலில் இருந்து வள்ளியூா் வழியாக திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள், கரோனா பொது முடக்கத்துக்கு பின்னா் வள்ளியூா் பேருந்து நிலையத்திற்கு வராமல் புறவழிச்சாலை வழியாக சென்றுவிடுகிறது.

இதனால் வள்ளியூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே, வள்ளியூா் வழியாக இயக்கப்பட்டு வரும் அனைத்து அரசுப் பேருந்துகளும், வள்ளியூா் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.