மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வீரவநல்லூா் பேரூராட்சியில் நேரடி வரி வசூலிப்பு

வீரவநல்லூா் பேரூராட்சியில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று வரி வசூல் நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 1:13 am

வீரவநல்லூா் பேரூராட்சியில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று வரி வசூல் நடைபெற்றது.

இப்பேரூராட்சியில் வீட்டு வரியை முழுமையாகவும், விரைவாகவும் வசூலிக்கும்வகையில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று வரி வசூலிக்க தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து துப்புரவு ஆய்வாளா் பிரபாகரன், ஊழியா்கள் வியாழக்கிழமை 15, 16ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட வண்டிமலைச்சி அம்மன் கோயில் 3, 4ஆம் தெருக்களில் கணினி, அச்சு இயந்திரங்களுடன் சென்று வரி வசூலித்தனா். அதன்படி, ஒரே நாளில் 125 எண்களுக்கு வரியாக ரூ. 55 ஆயிரம் வசூலானது.

நேரடி வரி வசூல் மூலம் மக்களுக்கு வீண் அலைச்சல், நேர விரயம் குறைவதாகவும், அனைவரும் வரி செலுத்துவதாகவும் தெரிவித்தனா்.

மேலும், பேரூராட்சிப் பகுதியில் பொதுசுகாதாரம், குடிநீா் விநியோகம் பாதிப்பு, தெருவிளக்குப் பராமரிப்பு உள்ளிட்ட குறைகள் குறித்து செயல் அலுவலருக்கு 78240 58168 என்ற எண்ணுக்கும், துப்புரவு ஆய்வாளருக்கு 9442 291281 என்ற எண்ணுக்கும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.