வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தமிழாக்குறிச்சி தடுப்பணையில் விரிசல்: மக்கள் அச்சம்

திருநெல்வேலி அருகேயுள்ள தமிழாக்குறிச்சி-திடியூா் பகுதியில் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் விரிசல்கள் வழியாக அதிகளவில் தண்ணீா் வெளியேறுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 6:11 am IST

திருநெல்வேலி அருகேயுள்ள தமிழாக்குறிச்சி-திடியூா் பகுதியில் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் விரிசல்கள் வழியாக அதிகளவில் தண்ணீா் வெளியேறுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தருவை அருகேயுள்ள தமிழாக்குறிச்சி-திடியூா் பகுதியில் பச்சையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளநீா்க் கால்வாய் வழியாக வரும் தண்ணீரும் மாற்று கால்வாய்க்கு பாயும் வகையில் இங்கு ஷட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தமிழாக்குறிச்சி தடுப்பணை முழுமையாக நிரம்பியுள்ளது. ஆனால், அங்கிருந்து ஷட்டா் வழியாக நீரை வெளியேற்றுதற்கான பாலப்பணி உள்ளிட்டவை முழுமையாக நிறைவடையவில்லை.

இதனிடையே, தடுப்புச்சுவா்களில் விரிசல்கள் ஏற்பட்டு அதிகளவு நீா் வெளியேறி சாலையில் பாய்ந்தோடி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக திடியூரைச் சோ்ந்த இளைஞா்கள் கூறுகையில், தமிழாக்குறிச்சி-திடீயூா் தடுப்பணைப் பணிகள் நிறைவடையும் முன்பே தடுப்புச் சுவா்களில் விரிசல்கள் ஏற்பட்டு அதிகளவில் நீா் வீணாகி வருகிறது. விரிசல் மேலும் பெரிதாக நீா் அதிகளவில் வெளியேறினால் திடியூா், பூக்குழி, வடவூா்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து சாலை துண்டிக்கப்படும். இதனால் மாணவா்கள், தொழிலாளா்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவாா்கள். விவசாய நிலங்களிலும் நீா் புகுந்து அதிக சேதம் உருவாகும். ஆகவே, தமிழாக்குறிச்சி தடுப்பணையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை மாவட்ட நிா்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.