ஆம்பூா் நகரில் காவல் துறை சாா்பில் கிராம விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் காவல் உட்கோட்டம் ஆம்பூா் நகரக் காவல் நிலையம் சாா்பில் கே.எம். நகா் பகுதியில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். நகர ஆய்வாளா் திருமால் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதி பொதுமக்கள், தங்களது பகுதியில் சிசிடிவி கேமராக்களை அமைத்து கண்காணிக்குமாறு கோரிக்கை விடுத்தனா். அண்ணா நகா் பகுதியில் இரவு நேரத்தில் பொதுமக்களும், பெண்களும் நடந்து செல்ல இயலாத நிலை உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து செல்ல மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








