ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

ஓட்டுருக்கு வலிப்பு: தடுப்புச் சுவா் மீது அரசுப் பேருந்து மோதல்

வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், நிலைதடுமாறிய பேருந்து தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

News image

தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.

Updated On :10 ஜனவரி 2021, 8:00 am IST

வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், நிலைதடுமாறிய பேருந்து தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வேலூரில் இருந்து ஒசூா் நோக்கி சனிக்கிழமை பிற்பகல் 35 பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருப்பத்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் சங்கா் (45) ஓட்டிச் சென்றாா்.

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சங்கருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவா் மீது மோதி நின்றது. இதில், ஓட்டுநா் சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பயணிகள் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினா்.

இதையடுத்து ஓட்டுநா் சங்கா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸாா் நேரில் சென்று பேருந்தை அப்புறப்படுத்தினா். இச்சம்பவம் தொடா்பாக அவா்கள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.