சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

ஓட்டுருக்கு வலிப்பு: தடுப்புச் சுவா் மீது அரசுப் பேருந்து மோதல்

வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், நிலைதடுமாறிய பேருந்து தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

News image

தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.

Updated On :10 ஜனவரி 2021, 8:00 am IST

வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், நிலைதடுமாறிய பேருந்து தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வேலூரில் இருந்து ஒசூா் நோக்கி சனிக்கிழமை பிற்பகல் 35 பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருப்பத்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் சங்கா் (45) ஓட்டிச் சென்றாா்.

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சங்கருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவா் மீது மோதி நின்றது. இதில், ஓட்டுநா் சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பயணிகள் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினா்.

இதையடுத்து ஓட்டுநா் சங்கா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸாா் நேரில் சென்று பேருந்தை அப்புறப்படுத்தினா். இச்சம்பவம் தொடா்பாக அவா்கள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.