ஆம்பூா் அருகே நரிக்குறவா் காலனியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியினா் சிரமப்படுகின்றனா்.
ஆம்பூரை அடுத்த சோலூா் ஊராட்சி நமாஸ்மேடு பகுதியில் நரிக்குறவா் காலனி அமைந்துள்ளது. அங்கு சுமாா் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தவா் வசிக்கின்றனா். அவா்களுக்கு ரோட்டரி சங்கத்தின் பங்களிப்புடன் தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அப்பகுதியில் வசிப்போருக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
அந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுப்பதற்கான மின் மோட்டாரில் அண்மையில் பழுது ஏற்பட்டதால் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனால் குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று விலை கொடுத்து வாங்கும் அவல நிலை காணப்படுகிறது. இது குறித்து மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

