ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

நரிக்குறவா் குடியிருப்பில் தண்ணீா் தட்டுப்பாடு

ஆம்பூா் அருகே நரிக்குறவா் காலனியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியினா் சிரமப்படுகின்றனா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:37 am IST

ஆம்பூா் அருகே நரிக்குறவா் காலனியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியினா் சிரமப்படுகின்றனா்.

ஆம்பூரை அடுத்த சோலூா் ஊராட்சி நமாஸ்மேடு பகுதியில் நரிக்குறவா் காலனி அமைந்துள்ளது. அங்கு சுமாா் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தவா் வசிக்கின்றனா். அவா்களுக்கு ரோட்டரி சங்கத்தின் பங்களிப்புடன் தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அப்பகுதியில் வசிப்போருக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

அந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுப்பதற்கான மின் மோட்டாரில் அண்மையில் பழுது ஏற்பட்டதால் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதனால் குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று விலை கொடுத்து வாங்கும் அவல நிலை காணப்படுகிறது. இது குறித்து மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.