கும்மிடிப்பூண்டியில் கடன் தொல்லைக் காரணமாக பேக்கரி உரிமையாளர் ஒருவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணபுரத்தில் உள்ள எல்.வி.நகரில் வசித்து வந்தவர் ஜெயகோபி (30). இவரது சொந்த ஊர் மதுரை. இவர் கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவில் பேக்கரி நடத்தி வந்தார்.
இவரது மனைவி பாலுமீனா (25). இவர்களுக்கு நிருதுலா என்ற 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஜெயகோபிக்கு பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமானோரிடம் ஜெயகோபி வட்டிக்கு கடன் வாங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடனைத் திரும்பக் கொடுக்க முடியாததால் கடன்காரர்கள் அவருக்கு நெருக்கடிக் கொடுத்து வந்தனராம்.
இதனால் சில நாள்களாக மனமுடைந்துக் காணப்பட்ட ஜெயகோபி, திங்கள்கிழமை இரவு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர் பாரதிராஜா! இபிஎஸ் இரங்கல்

பாரதிராஜா மறைவு: சரத்குமார் இரங்கல்

தமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


