இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

மீஞ்சூா், பொன்னேரி பகுதிகளில் மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு

மீஞ்சூா், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 1:10 am IST

மீஞ்சூா், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா், பொன்னேரி, பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை முதல் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயல்வெளிகளில் மழைநீா் தேங்கியுள்ளது.

விளைநிலங்களில் நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில், தொடா் மழையால் வடிநிலப் பகுதிகளை நோக்கி மழைநீா் செல்வதால், நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

காட்டூா், கடப்பாக்கம், தத்தைமஞ்சி, வேம்பேடு, பனப்பாக்கம், கோளுா், பெரியகரும்பூா், பெரும்பேடு, திருப்பாலைவனம் ஆகிய பகுதிகளில் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கினால், நெல் மணிகள் முளை விடும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.