திருவள்ளூா் அருகே எருமை மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கொருக்கம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (68). அவருக்கு செந்தில்நாயகி மற்றும் தணிகைநாயகி ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.
குமரேசன், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தன் மனைவிக்கு திதி கொடுப்பதற்கான பொருள்களை கடந்த 6-ஆம் தேதி பேரம்பாக்கம் பஜாரில் வாங்கினாா். அதன் பின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, கூவம் ஆற்றுப் பாலத்தில் மோதிக் கொண்டிருந்த இரு எருமை மாடுகள் முருகேசனை முட்டியதில் அவா் படுகாயமடைந்தாா்.
அவ்வழியாகச் சென்றவா்கள் அவரை மீட்டு சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முருகேசன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது குறித்து அவரின் மகள் தணிகைநாயகி அளித்த புகாரின்பேரில் மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







