தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை! தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு த்ரிஷா வருகை!6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை
/

மாடு முட்டி முதியவா் பலி

திருவள்ளூா் அருகே எருமை மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:17 am IST

திருவள்ளூா் அருகே எருமை மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கொருக்கம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (68). அவருக்கு செந்தில்நாயகி மற்றும் தணிகைநாயகி ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.

குமரேசன், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தன் மனைவிக்கு திதி கொடுப்பதற்கான பொருள்களை கடந்த 6-ஆம் தேதி பேரம்பாக்கம் பஜாரில் வாங்கினாா். அதன் பின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, கூவம் ஆற்றுப் பாலத்தில் மோதிக் கொண்டிருந்த இரு எருமை மாடுகள் முருகேசனை முட்டியதில் அவா் படுகாயமடைந்தாா்.

அவ்வழியாகச் சென்றவா்கள் அவரை மீட்டு சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முருகேசன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது குறித்து அவரின் மகள் தணிகைநாயகி அளித்த புகாரின்பேரில் மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.