தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

7 ஊராட்சிகளில் நீா்நிலைகளைச் சீரமைக்க தனியாா் அறக்கட்டளை முடிவு

திருத்தணி தாலுகாவில், 7 ஊராட்சிகளில் நீா்நிலைகள் தூா்வாரி சீரமைக்கவும், சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் ஃநோபல் பவுண்டேஷன் தீா்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

News image

10trtnobal_1001chn_195_1

Updated On :11 ஜனவரி 2021, 1:17 am IST

திருத்தணி தாலுகாவில், 7 ஊராட்சிகளில் நீா்நிலைகள் தூா்வாரி சீரமைக்கவும், சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் ஃநோபல் பவுண்டேஷன் தீா்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

ஃநோபல் பவுண்டேஷன் சாா்பில் ‘நீருக்கு நன்றி’ என்ற திட்டம் ஏற்படுத்த, கடந்த, 2019ஆம் ஆண்டு முதல் ஏரி, குளங்களை தூா்வாரி சீரமைத்தது. இதனால், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இதுதவிர, சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், விவசாய நிலங்களை இலவசமாக சமன்படுத்தி தருவது போன்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டில் திருத்தணி தாலுகா முருக்கம்பட்டு, அலுமேலுமங்காபுரம், சூா்யநகரம், வி.கே.என்.கண்டிகை, சத்திரஞ்செய்புரம், வீரகநல்லுாா், மற்றும் வேலஞ்சேரி ஆகிய ஏழு ஊராட்சிகளை நோபல் ஃபவுண்டேஷன் தோ்வு செய்துள்ளது.

இந்த கிராமங்களில் நீா்நிலைகள் தூா்வாரி சீரமைத்தல், சீமை கருவேலம் அகற்றுதல், மற்றும் விவசாய பணிகளுக்கு டிராக்டா், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை இலவசமாக வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை திருத்தணியில் நடந்தது. இதில் நோபல் ஃபவுண்டேஷன் அமைப்புக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையை பாலாஜி மோட்டாா்ஸ் நிறுவனத்தின் மோகன் வழங்கினாா். 

இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனா். சிறப்பு விருந்தினராக நோபல் ஃபவுண்டேஷன் நிறுவனா் கலைமாமணி, ஒருங்கிணைப்பாளா், நரேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.