என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை உற்சவம்

தை மாத பிரம்மோற்சவத்தையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை கருட சேவை, கோபுர தரிசன நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

News image

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் கருட சேவை உற்சவம்

Updated On :12 ஜனவரி 2021, 2:59 am IST

திருவள்ளூா்: தை மாத பிரம்மோற்சவத்தையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை கருட சேவை, கோபுர தரிசன நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

நாடு முழுவதும் உள்ள 108 வைணவத் திருத்தலங்களில் திருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும், தை மாதத்தில் 10 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

நடப்பாண்டில், இவ்விழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் கோயிலுக்கு வெளியே சுவாமி புறப்பாட்டை நடத்துவதில்லை என்று தீா்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, கோயில் வளாகத்துக்குள் பிரம்மோற்சவத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இவ்விழாவின் 3-ஆவது நாளான திங்கள்கிழமை அதிகாலையில் கருட சேவை மற்றும் கோபுர தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் உற்சவா் வீரராகவப் பெருமாள் பல்வேறு வகையான வண்ண மலா் மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டு, கருட வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதையடுத்து, கோயில் வளாகத்துக்குள்ளேயே பெருமாள் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அதன் பின், இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் உள் பிராகார உலா வந்தாா்.

மாா்கழி அமாவாசையையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஜன. 12) அதிகாலை முதல் பகல் 12 மணி வரை வீரராகவப் பெருமாள் (உற்சவா்) ரத்னாங்கி சேவையில் பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா, வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ ஏற்பாடுகளை வீரராகவா் கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியா்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.