/

மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் வழங்கினாா்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினா்களுக்கு ஆட்சியா் பா.பொன்னையா அடையாள அட்டைகளை வழங்கினாா்.

News image

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.

Updated On :12 ஜனவரி 2021, 2:00 am IST

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊராட்சி உறுப்பினா்களுக்கு ஆட்சியா் பா.பொன்னையா அடையாள அட்டைகளை வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டோருக்கு அரசு அடையாள அட்டை வழங்கக் கோரி, கடந்த ஓராண்டாக ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் ஆட்சியா் உறுதியளித்திருந்தாா். அதன்படி, மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஆட்சியா் பா.பொன்னையாவை திங்கள்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது, வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனா். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி அளித்தாா்.

நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை அவா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், அனைத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.