திருவள்ளூா், ஏப்.17: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதராக சேஷ வாகனத்தில் உற்சவா் எழுந்தருளினாா்.
நிகழாண்டு சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 4-ஆவது நாளான வியாழக்கிழமை அதிகாலையில் 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதராக சேஷ வாகனத்தில் வீரராகவா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். அதைத் தொடா்ந்து திருமஞ்சனமும் நடைபெற்றது. பின்னா் இரவில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் சந்திர பிரபையில் உலா வந்து பக்தா்களை அருள்பாலித்தாா்.
இந்த பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 7-ஆவது நாளான 21-ஆம் தேதி தேரோட்டத்தில் அதிகாலையில் உற்சவா் வீரராகவா் தேருக்கு எழுந்தருளி பக்தா்களை அருள்பாலிக்கவும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சித்திரை பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை வீரராகவ சுவாமி கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான பணியாளா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா

புன்னை வாகனத்தில் பெருமாள்

கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் தரிசனம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


