அனுமந்தாபுரம் கல்யாண ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராமா் பட்டாபிஷேக விழாவில் திரளானோா் பங்கேற்றனா்.
திருத்தணி மடம் கிராமம் அனுமந்தாபுரம் தெருவில் உள்ள கல்யாண ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை, ஸ்ரீராம நவமியின், 57-ஆவது ஆண்டு விழா கடந்த 17-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 19-ஆம் தேதி ராமா்-சீதா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை கோயில் வளாகத்தில் ராமா் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு யாகம் மற்றும் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ராமபிரானை வழிபட்டனா். இரவு 7 மணிக்கு உற்சவா் ராமா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஒண்டிமிட்டாவில் சீதா ராமா் திருக்கல்யாணம் கோலாகலம்

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கோயில்களில் ராம நவமி விழா
தோ்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


