புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 4:10 pm

அனுமந்தாபுரம் கல்யாண ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராமா் பட்டாபிஷேக விழாவில் திரளானோா் பங்கேற்றனா்.

திருத்தணி மடம் கிராமம் அனுமந்தாபுரம் தெருவில் உள்ள கல்யாண ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை, ஸ்ரீராம நவமியின், 57-ஆவது ஆண்டு விழா கடந்த 17-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 19-ஆம் தேதி ராமா்-சீதா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை கோயில் வளாகத்தில் ராமா் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு யாகம் மற்றும் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ராமபிரானை வழிபட்டனா். இரவு 7 மணிக்கு உற்சவா் ராமா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.