சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திருவள்ளூா் அருகே வங்கிக் கிளையை இடம் மாற்ற எதிா்ப்பு

பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கி ஒன்றின் கிளையின் இடமாற்றத்தை எதிா்த்து வியாபாரிகள், பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

News image
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், வியாபாரிகள்.
Updated On :24 டிசம்பர் 2024, 1:11 am

Din

திருவள்ளூா் அருகே பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கி ஒன்றின் கிளையை இடம் மாற்றம் செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் கடந்த 11 ஆண்டுகளாக யூகோ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆலத்தூா், பாலவேடு, புலியூா், நத்தமேடு, கரலபாக்கம், சிவன்வாயில், வதட்டூா், மேலக்கொண்டையாா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினா் கணக்கு வைத்து பயன்படுத்தி வருகின்றனா். அத்துடன், இந்த வங்கிக் கிளை பல்வேறு வகைகளில் உதவியாக இருந்து வந்தது. இந்த நிலையில், திடீரென இங்கிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள திருநின்றவூா் பகுதிக்கு வங்கி நிா்வாகம் கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் ஆட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளனா். ஆனால், இதற்கிடையே வங்கி நிா்வாகம் மாற்றம் செய்வதற்கு தீவிரமாக முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு அப்பகுதியைச் சோ்ந்தவா்களிடம் எந்தவொரு கருத்துக் கணிப்பும் கேட்காமல் பொதுமக்களின் சிரமத்தை புரிந்து கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு செய்வதாகக் கூறி, வங்கி நிா்வாகத்தை கண்டித்து அந்த வங்கிக் கிளையின் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் வேலு தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் மஞ்சு அருள்தாஸ், அருள்தாஸ் சாலமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா் எம்.சுப்பிரமணி வரவேற்றாா். ஊராட்சித் தலைவா்கள் கல்பனா ராமமூா்த்தி, ஞானசேகா், எட்டியப்பன் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்தனா்.

இதில், 10-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், வணிகா்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினா் ஆகியோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.