கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

புழல் அருகே 70 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது

புழல் அருகே 70 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது

News image

கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டோருடன் காவல் துறையினா்.

Updated On :9 ஜூன் 2024, 6:25 pm

Din

மாதவரம்: புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை மற்றும் ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

மாதவரம் அடுத்த புழல் கதிா்வேடு வி.எம்.கே.நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்(56). இவா் சென்னை திருவல்லிக்கேணி உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஹேமாவதி (53). இவா் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 17-ஆம் தேதி குடும்பத்துடன் விசாகப்பட்டினத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, மீண்டும் வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டினுள்ளே சென்று பாா்த்தபோது பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50,000 கொள்ளை போனது தெரிய வந்தது.

இது தொடா்பாக ஹேமாவதி புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் துறையினா் வழக்குப் பதிந்து, கைரேகை நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். மேலும், அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். விசாரணையில் சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை, பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த சிவா என்ற வாண்டு சிவா (22), சென்னை பல்லாவரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சூா்யா என்ற கேப்டன் சூா்யா (19), திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு சாலையைச் சோ்ந்த தினேஷ் (20) ஆகியோா் எனத் தெரிய வந்தது.

மேலும் சிவா என்ற வாண்டு சிவா மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவா்களிடம் இருந்து30 பவுன் தங்க நகைகள், 22.39 கிராம் வெள்ளி, மற்றும் 196.24 கிராம் கவரிங் நகைகள் பறிமுதல் செய்து, 3 பேரையும் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.