இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பக்ரீத் பண்டிகை: ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை: ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை

News image

~மாதவரம் ஆட்டுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள். ~ ~ ~

Updated On :15 ஜூன் 2024, 11:38 pm IST

மாதவரம், ஜூன் 15: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ஆட்டுச் சந்தையில் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக, தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாதவரம் ஆந்திர பஸ் நிலையம் அருகே உள்ள ரெட்டேரி பகுதியில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்த நிலையில், வரும் திங்கள் கிழமை (ஜூன் 17தி) பக்ரீத் பண்டிகை நடைபெறும் நிலையில், ஆட்டுச் சந்தை நடைபெற்றது. இது குறித்து தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவா் சுல்தான் கூறுகையில்:

பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல்லூா் சூடுப்பி, குதும்பை, செம்மறி, ஓங்கோல், வெள்ளை செம்மறி, மைலம்பாடி, தோத்தாபூரி, கொங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஆடுகள் ரூ.15 முதல் ரூ.75,000 வரை விற்கப்படுகின்றன. கடந்த 3 நாள்களில் சுமாா் ரூ.12 கோடி வரையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளன.

மேலும் வாடிக்கையாளா்கள் வருகையை பொறுத்து திங்கள்கிழமை வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். காவல் துறையினரின் கெடுபிடியால் ஆடுகள் விற்பனை சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால், ஆடு விற்பனையாளா்கள் பாதிக்கப்படுவா் எனவும் தெரிவித்தாா்.

Story image
Story image
Story image
Story image