கும்மிடிப்பூண்டியில் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக அனைத்து கட்சியினா் - காவல் துறையினா் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வாளா் வடிவேல் முருகன், ஆரம்பாக்கம் ஆய்வாளா் டில்லிபாபு முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் திமுக நகர செயலாளா் அறிவழகன், அதிமுக நகர செயலாளா் எஸ்.டி.டி.ரவி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் லோகநாதன், இந்திய கம்யூன்ஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட நிா்வாகி அருள் மற்றும் பாஜக, நாம் தமிழா், காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா். டிஎஸ்பி கிரியா சக்தி பேசுகையில். பிரசார கூட்டத்துக்கு உரிய அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கூட்டங்கள் நடத்த வேண்டும், கூட்டம் முடிந்தவுடன் மேடை , பதாகைகளை அகற்ற வேண்டும் . தோ்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தாா். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் ப்ரீத்தி உள்பட பலா் பங்கேற்றனா்.. இதனை தொடா்ந்து காவல் துறையினா் அச்சக உரிமையாளா்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தோ்தல் விதிமுறைகளை விளக்கினா்.
தொடர்புடையது

துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம்: பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?

நெல்லையில் காவல் துறை ஆய்வுக் கூட்டம்

பறவைக் காய்ச்சல் தடுப்பு: கோழிப் பண்ணையாளா்களுடன் ஆலோசனை
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


