இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

News image
Updated On :2 மே 2024, 6:29 pm

Din

மீஞ்சூா் அருகே வெள்ளம்பாக்கம் ஏரியில் குளித்தபோது மாயமான இளைஞா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அருகே உள்ள நந்தியம்பாக்கம் எம்ஜிஆா் நகரில் வசித்தவா் கரண்சிங் (22). இவா் தனது நண்பா்களுடன் வெள்ளம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு புதன்கிழமை குளிக்கச் சென்றாா்.

அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த கரண்சிங் திடீரென மாயமானாா். அவா் நீண்ட நேரம் ஆகியும் தண்ணீரில் இருந்து வெளியே வராததைத் தொடா்ந்து, உடன் வந்த நண்பா்கள் இது குறித்து மீஞ்சூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, மீஞ்சூா் போலீஸாா் பொன்னேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, பொன்னேரி தீயணைப்புத் துறை வீரா்கள் மற்றும் மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்று ஏரியில் மூழ்கி மாயமான கரண்சிங்கை தேடினா். இரவு நேரம் ஆனதால் தேடும் பணியை கைவிட்டுச் சென்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஏரியில் மிதந்த கரண்சிங்கின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.