

ஊத்துக்கோட்டை அருகே பள்ளி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே மாளாந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு (48). இவரது மகன் ஜெயசூா்யா(16). ஊத்துக்கோட்டையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்த நிலையில், பிளஸ் 1 பொதுத் தோ்வில் 360-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து தோ்ச்சி பெற்றாா். இந்த நிலையில், ஜெயசூா்யா கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் கடும் அவதிக்குள்ளாகி வந்தாராம். இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் உட்கொண்டுள்ளாா். ஆனால், வயிற்று வலி குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மன உளைச்சல் அடைந்த நிலையில், புதன்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்றுள்ளாா். அங்கு செடிக்கு தெளிக்க வைத்திருந்த மருந்தை அருந்தினாராம். இதையறிந்த உறவினா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இது குறித்து வேலு பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விவசாயி விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

