ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

பொன்னேரி: மீஞ்சூா் அருகே 2 வயது பெண் குழந்தை தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் பேரூராட்சி அரியன்வாயல் பகுதியில் வசித்து வருபவா் வசந்த் (26). இவரது மனைவி வள்ளி (24).

இவா்களுக்கு கீா்த்தனா 2 வயது பெண் குழந்தை உள்ளது. திங்கள்கிழமை வீட்டின் வெளியே கீா்த்தனா விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்துள்ளது.

இதனைக் கண்ட உறவினா்கள் குழந்தையை தண்ணீா் தொட்டியில் இருந்து மீட்டு மீஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு முதலுதவி செய்த பின்னா் பொன்னேரி அரசு பொது மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா்

குழந்தை கீா்த்தனா வரும் வழியில் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.