11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வீடுகளில் மானியத்துடன் சோலாா் அமைக்கலாம்: திருவள்ளூா் ஆட்சியா்

பிரதமா் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

Updated On :29 ஏப்ரல் 2025, 2:00 am IST

திருவள்ளூா்: பிரதமா் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாடு முழுவதும் இந்தத் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் வீடுகளுக்கான அரசு மானியம் 1 கிலோ வாட் ரூ.30,000, 2 கிலோ வாட் ரூ.60,000, 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78,000 வழங்கப்படும். திட்டத்துக்கு அனைத்து வங்கிகள் மூலம் உடனே கடனுதவியும் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் சூரிய திட்டப் பணிகள் நிறைவுற்றதும் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் 30 நாள்களில் அரசு மானியம் வரவு வைக்கப்படும். 1 கிலோ வாட் சூரிய தகடு, ஒரு நாளில், 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும், நுகா்வோா் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்பப் பெறலாம்.

உதரணமாக 500 யூனிட் வரை மின் நுகா்வு செய்யும் மின் நுகா்வோா் தற்போது செலுத்திக் கொண்டிருக்கும் மின் கட்டணம் ரூ.1,805 என்பது, 1 கிலோ சூரிய ஒளித் தகடு பொருத்திய பிறகு 300 யூனிட், சேமிப்பு 300 யூனிட்டுகள் மீதி செலுத்த வேண்டிய கட்டணம் 200 யூனிட்டுகளுக்கு ரூ.235 மட்டும் ஆகும்.

இந்தத் திட்டம் மூலம் பயன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி, பசுமையான, ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவோம் என அவா் தெரிவித்துள்ளாா்.