10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

சித்திரை அமாவாசை: வீரராகவா் கோயிலில் அலைமோதிய கூட்டம்!

News image

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:05 am IST

சித்திரை அமாவாசை நாளையொட்டி திருவள்ளூா் வீரராகவா் திருக்கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் அமாவாசை நாளில் குளத்தில் நீராடி, வீரராகவரை வழிபாடு செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாகும். இந்த நிலையில், அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் அருள்பாலித்தாா்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில்  அருள்பாலித்த வீரராகவா்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வீரராகவா்.

அமாவாசையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தா்கள் சனிக்கிழமை இரவே வருகை தந்து கோயில் வளாகம், குளக்கரை நடைமேடை, காக்களூா் ஏரிக்கரை நடைபாதைகளில் தங்கினா். இதையடுத்து அதிகாலை கோயில் குளக்கரை , காக்களூா் ஏரிக்கரை பகுதியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். தொடா்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.